திருவரங்கம் கிழக்கு சித்திரை வீதி பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி லட்சுமி (வயது 85) சம்பவத்தன்று வீட்டில் லட்சுமி பூஜை அறையில் இருந்த விளக்கை ஏற்ற முயன்றார். அப்போழுது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இந்த தீ சிறிது நேரத்தில் அவரது இடுப்பு மற்றும் இரு கால்களிலும் பரவி காயமடைந்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.