திருச்சி: மாடு முட்டியதில் முதியவர் பலி

570பார்த்தது
திருச்சி: மாடு முட்டியதில் முதியவர் பலி
திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள திருநெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் மருதமுத்து வயது 85. தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த காளை மாடு ஒன்று அவரை முட்டி தூக்கி வீசியது. 

இதில் பலத்த காயமடைந்த அவர் அருகில் இருந்தவர்களால் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த துவாக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி