திருச்சி மாநில நிர்வாகி கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், போராட்டமாக இருந்தாலும் பொதுக்கூட்டமாக இருந்தாலும் தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடத்துகிறோம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லக்கூடிய திராவிட மாடல் ஜனநாயகத்திற்கு விரோதமாக ஒரு போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று சொன்னால் உடனடியாக தடை செய்வது, கைது செய்வது, சிறையில் அடைப்பது, வழக்கு பதிவு செய்வது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு கூட எங்களுடைய கருத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்காக ஏற்பாடு செய்யக்கூடிய இந்த பொதுக்கூட்டத்திற்கு கூட காவல்துறை அனுமதி மறுத்தது. நாங்கள் நீதிமன்றத்தை அணுகி நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று இந்த கூட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்துகிறது, ஆர்ப்பாட்டம் நடத்துகிறது,
கூட்டம் நடத்துகிறது ஒரு நகராட்சியில், மாநகராட்சியில் நடத்துகிறார்கள் என்று சொன்னால் மாநகராட்சி முழுவதும் அவர்கள் அந்த போராட்டம் குறித்து விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும் அந்த போராட்டத்தை நடத்துவதற்கும் எந்தவித தடையுமின்றி அனுமதி அளிக்கக்கூடிய காவல்துறை ஆனால், பாரதிய ஜனதா கட்சி நடத்தக்கூடிய போராட்டங்களுக்கு அனுமதி மறுத்து கொண்டிருப்பது நடவடிக்கையாக இருக்கிறது என தெரிவித்தார்.