திருச்சி அதிமுக பூத் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

66பார்த்தது
திருச்சி மாநகர் மாவட்டம், கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பூத் கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட, கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தில்லைநகரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளரும், கழக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுலஇந்திரா, கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சாவூர் மண்டல செயலாளர் அறிவொளி ஆகியோர் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன், மாவட்ட கழக இணை செயலாளர் ஜாக்குலின், துணை செயலாளர் வனிதா, எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், மகளிர் அணி மாவட்ட செயலாளர் நசீமா பாரிக், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி