திருச்சி: தூக்கில் தொங்குவது போல் நடித்த பெண் பலி

1043பார்த்தது
திருச்சி: தூக்கில் தொங்குவது போல் நடித்த பெண் பலி
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை சஞ்சீவி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 39). இவர்கள் இருவரும் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மகன் லெனின் தனது தாயிடம் செல்போனை கேட்டு பிரச்சினை செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நேற்று பழனியம்மாள் சேலையால் மின்விசிறியில் தூக்கி மாட்டிக் கொள்வது போல நடித்து மகனை மிரட்ட நினைத்தார். அப்பொழுது மகன் லெனின் கண் முன்னே தூக்கு மாட்டுவது போல் பழனியம்மாள் முயற்சி செய்தார். அப்பொழுது திடீரென்று துரதிர்ஷ்டவசமாக பழனியம்மாள் கழுத்தை சேலை இருகியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன் லெனின் உள்ளிட்ட குடும்பத்தினர் பழனியம்மாளை மீட்டு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்ததினர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி