திருச்சி: "பெருசு" சரியான தலைப்பு; நடிகர் பாலசரவணன் பேட்டி

83பார்த்தது
ஸ்டோன் பீச் பிலிம்ஸ் பெர்வாஜ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இளங்கோ இயக்கத்தில் பெருசு திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தின் நடிகர் பாலசரவணன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் திரைப்படத்தை பார்த்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பெருசு திரைப்படம் திரையிடப்பட்ட இடமெல்லாம் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லோரின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்களுடன் படம் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் ரசித்து திரைப்படத்தை கண்டனர். தற்போது 7 படங்கள் முடிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஏழு படங்கள் தற்போது தயாரிப்பில் உள்ளன. திருச்சியில் சூரி நடிப்பில் தயாரிக்கப்பட்டு வரும் மாமன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தில் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். அடுத்து நயன்தாராவின் மண்ணாங்கட்டி படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

படம் ஆரம்பிக்கும் போது இந்த படத்தின் டைட்டில் எனக்கு கூறவில்லை. ஆனால், சூட்டிங்கில் மிகவும் நகைச்சுவையாக இருக்கும், படம் எடுத்த பின்னர் தான் இயக்குனர் இந்த படத்திற்கு பெருசு என்று பெயர் வைத்துள்ளதாக கூறினார். இது சரியான டைட்டில் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி