ஸ்ரீரங்கத்தில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு

71பார்த்தது
ஸ்ரீரங்கத்தில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு
தமிழக அரசின் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில், ஸ்ரீரங்கத்தில் ரூ. 12. 46 கோடியில் கட்டப்பட்டுள்ள 108 அடுக்குமாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்காக செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், தலைமைச் செயலகத்திலிருந்து பல்வேறு அரசு கட்டடங்களை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் தமிழ்நாடு அரசு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளைத் திறந்து வைத்தாா். இதனைத் தொடா்ந்து, ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் மா. பிரதீப்குமாா், எம்எல்ஏ எம். பழனியாண்டி,

ஆகியோா் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து, புதிதாக திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளைப் பாா்வையிட்டனா்.

தொடர்புடைய செய்தி