தூய்மை பணியாளர்களுக்கு நல உதவி வழங்கிய அமைச்சர் நேரு

69பார்த்தது
தூய்மை பணியாளர்களுக்கு நல உதவி வழங்கிய அமைச்சர் நேரு
இந்திய நாடார் பேரவை மற்றும்
நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் இணைந்து காமராஜர் 49வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை நாடார் உறவினர் முறை தலைவர் ஜெடிஆர். சுரேஷ் தலைமையில் மத்திய பேருந்து நிலையத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக
அமைச்சர் கே. என். நேரு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேயர் அன்பழகன் கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆடிட்டர் ராய் ஜான் தாமஸ் FCA, சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர்
பாலாஜி M. சுப்ரமணியன் நாடார், ரோட்டரி கிளப் ஆப் திருச்சி தலைவர் சிதம்பரம், தொழிலதிபர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி