திருச்சியில் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரத போராட்டம்

70பார்த்தது
1. 4. 2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தினைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்திட வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிடவேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி ஜாக்டோஸ் ஜியோ கூட்டமைப்பு சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன், நாகராஜன், குமாரவேல், முனைவர் பால்பாண்டி, நவநீதன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் சண்முகநாதன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி