திருச்சி மாநகரப் பகுதி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக இடைவிடாது லேசாகவும், தூறலாகவும், கனமழையாகவும் பெய்த வண்ணம் இருந்தது. இதனால் கே. கே. நகா், மன்னாா்புரம், அரியமங்கலம், பாலக்கரை, கண்டோன்மென்ட், விமான நிலையம், மத்திய, சத்திரம் பேருந்து நிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியது. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனா். சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி. மீ).
கல்லக்குடி- 30. 2, லால்குடி- 49, நந்தியாறு தலைப்பு- 70, புள்ளம்பாடி- 33. 4, தேவிமங்கலம்- 72 சமயபுரம்- 1, சிறுகுடி- 18. 8, வாய்த்தலை அணைக்கட்டு- 4. 2, மணப்பாறை- 76. 2, பொன்னனியாறு அணை- 35, கோவில்பட்டி- 39. 2, மருங்காபுரி- 67. 2, முசிறி- 16, புலிவலம்- 8, தாத்தையங்காா்பேட்டை- 10, நவலூா்குட்டப்பட்டு- 1, துவாக்குடி- 17. 2, குப்பம்பட்டி- 40, தென்பாடு- 20, துறையூா்- 25, பொன்மலை- 44. 2, திருச்சி விமான நிலையம்- 55, திருச்சி ஜங்ஷன்- 36, திருச்சி நகரம்- 19. 5 மி. மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 719. 3 மி. மீ மழை பெய்தது. சராசரியாக 29. 97 மி. மீ. மழை பதிவாகியுள்ளது. வானிலை மைய அறிவிப்பைத் தொடா்ந்து மழை தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.