திருச்சி ரயில் நிலையத்தில் 2கோடி தங்கம் பணம் பறிமுதல்

52பார்த்தது
சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று காலை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சோதனை செய்தனர் அப்பொழுது சந்தேகத்திற்கிடமான வகைகள் இருந்த லட்சுமணன் என்கிற பயணியின் உடமைகளை சோதனை செய்த போது அவரிடம் உரிய ஆவணங்களிலின்றி கொண்டுவரப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கம் இருந்துள்ளது அதனை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இது குறித்து வணிகவரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வணிகவரித் துறை அதிகாரிகள் நகைகள் மற்றும் ரொக்கம் எவ்வளவு என்பதை கணக்கிட்டனர். அதில் 15 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. தங்க நகைகளை கணக்கிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

லட்சுமணன் என்பவர் யார்? அவர் எங்கிருந்த நகைகளை கொண்டு வந்தார் யாரிடம் கொடுக்க எடுத்துச் சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Job Suitcase

Jobs near you