துறையூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் பலி

69பார்த்தது
துறையூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் பலி
துறையூர் அருகே உள்ள செல்லிபாளையம் அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த அய்யாகண்ணு என்பவர் மகன் சக்திவேல் வயது (35). சம்பவம் நடந்த இன்று அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு பணிக்குச் சென்ற அவர் அருகில் இருந்த மாமரத்தில் ஏறி மாங்காய் பறிக்க முயன்றுள்ளார். 

அப்போது மாமரத்தின் கிளை உடைந்து அருகில் இருந்த கிணற்றுத் திட்டில் விழுந்து பலத்த காயமடைந்த அவர் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற துறையூர் தீயணைப்புத் துறையினர் சக்திவேலின் உடலைச் சடலமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்தி