புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் திருச்சி புதுக்கோட்டை சாலையில் எம் ஐ இ டி கல்லூரி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவருக்கு எதிரே வந்த கார் ஒன்று இவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த பாலமுருகன் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனரான திருச்சி பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து நவல்பட்டு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.