திருச்சி மாவட்டம், அய்யாறு உபவடிநில பகுதிகளில் ஏரி மற்றும் அணைக்கட்டுகளின் நீரினைப் பயன்படுத்துவோர் சங்க மேலாண்மை குழுக்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி துறையூர் வட்டத்தில் கண்ணனூரில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் சேனப்பநல்லூர் அணைக்கட்டு மற்றும் ஏரி, நாகநாய்க்கன்பட்டி ஏரி, வீரமச்சான்பட்டி மேல் அணைக்கட்டு, வீரமச்சான்பட்டி கீழ் அணைக்கட்டு, தீர்த்தநாய்க்கன் அணைக்கட்டு ஆகிய 5 நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களின் மேலாண்மை குழுக்களுக்கான 2 ஆம் ஆண்டு திறன் மேம்பாட்டு பயிற்சியில் நீர்பாசன சங்க தலைவர்கள், ஆட்சி மன்ற தொகுதி உறுப்பினர்கள் மற்றும் ஆயக்கட்டுதாரர், பாசனதாரர்கள் பங்கேற்றார்கள்.
இப்பயிற்சியில் சங்க உறுப்பினர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து தமிழ்நாடு விவசாய நீர்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம் 2000 தமிழ்நாடு சட்டம் 7/2001 மற்றும் அதன் விதிகள் குறித்தும் குறைந்த நீரில் அதிக வருமானம் ஈட்டுவது குறித்தும் துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்சி நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் நீர்வளத்துறை துறையூர் பாசனப்பிரிவு உதவிப்பொறியாளர் மோகன்ராஜ் தலைமையில், பாசன மேலாண்மை அலகு அலுவலகத்தின் சமூக மேம்பாட்டு நிபுணர் செல்வராஜ் பயிற்சி அளித்தார்.