துறையூர்: கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளி கைது

72பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூரில் கொலை வழக்கு ஒன்றில் 20 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது குற்றவாளியை கைது செய்த போலீசார்.

திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன் இவர் கட்டி வந்த புதிய வீட்டின் கட்டிடப் பணியில் பீகாரைச் சேர்ந்த சிண்டு என்கிற சோட்டு சச்சின் என்கிற சச்சின் குமார் ஆகிய இருவரும் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவருக்கும் கட்டிடப் பணியின் பணி மேற்பார்வையாளரான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தரம் சர்மா என்பவர் முறையாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது இரண்டு மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தைக் கேட்டு இருவரும் தரம் சர்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 21. 9. 23 அன்று ஏற்பட்ட தகராறில் இருவரும் சேர்ந்து தரம் சர்மாவை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சச்சின் என்கிற சச்சின் குமார் ஒரு மாதத்திற்கு முன் கைதான நிலையில் மற்றொரு குற்றவாளியான சிண்டு என்கிற சொட்டு ஜார்கண்ட் மாநிலத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் சிண்டு என்கிற சொட்டு ரயிலில் சேலம் வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சேலம் ரயில் நிலையத்தில் வைத்து அவரை துறையூர் போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி