உப்பிலியபுரம் போலீசார் காணாமல் போன 10 செல்போனை கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைப்பு திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி செல்போன் காணாமல் போனதாக புகார்கள் வந்த நிலையில் இருந்தது. உடனடியாக எஸ்ஐ கருப்பண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்தனர். உடனடியாக செல்போன் காணாமல் போனதாக புகார் அளித்த உரிமையாளர்கள் வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார், ஒக்கரை சேர்ந்த விஸ்வநாதன், கொப்பம்பட்டி சேர்ந்த ஜெயப்பிரியா, புலிவலத்தைச் சேர்ந்த வேல்முருகன், கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த செல்வம், ஒசரப்பள்ளி அன்பரசன், கீரம்பூரைச் சேர்ந்த குமார், மாராடி சேர்ந்த அன்பழகன், குளத்துரை சேர்ந்த பாண்டியன், தண்டலை புதூர் சேர்ந்த சந்தோஷ் ஆகியோரை வரவழைத்து துறையூர் இன்ஸ்பெக்டர் முத்தையன் அவர்களிடம் ஒப்படைத்தார். செல்போன் உரிமையாளர்கள் காவல்துறைக்கு பாராட்டுகளையும் நன்றி தெரிவித்தனர்.