துறையூர்: மூதாட்டியிடம் 8 பவுன் தங்க செயின் பறிப்பு

68பார்த்தது
துறையூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 8 பவுன் தங்க செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றார்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பெருமாள்பாளையம் ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி நித்யானந்தம்(70). இவரது கணவர் இறந்து வி்ட்டார். பிள்ளைகள் வெளியூரில் வசிக்கின்றனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக வசித்த இவரிடம் நேற்று மதியம் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் முகத்தை மூடிக்கொண்டு குடிநீர் கேட்டுள்ளார். அப்போது குடிநீர் எடுக்க வீட்டுக்குள் மூதாட்டி சென்றார். பின்னால் தொடர்ந்து சென்ற அந்த மர்ம நபர் மூதாட்டியின் கழுத்திலிருந்த 8 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு கதவை வெளிப்புறமாக மூடி விட்டு தப்பியோடி விட்டார். இது தொடர்பாக மூதாாட்டி துறையூர் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் துறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி