நடந்து சென்ற நபரை குடிபோதையில் தாக்கிய மூன்று பேர் கைது

1156பார்த்தது
நடந்து சென்ற நபரை குடிபோதையில் தாக்கிய மூன்று பேர் கைது
திருச்சி துரைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மயில் மார்க் மிட்டாய் கடையில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பணி முடிந்து மேலப்புதூர் மெயின் ரோடு பகுதியில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த மூன்று நபர்கள் குடிபோதையில் பிரகாஷிடம் தகாத வார்த்தைகளால் பேசி அவரை திட்டி தாக்கியுள்ளனர்.

இது குறித்து பிரகாஷ் பாலக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பிரகாஷை தாக்கிய பாலக்கரை கெம்ஸ்டவுன் செபஸ்தியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த லியோஅமல்ராஜ் சவேரியார் கோவில் தெருபகுதியை சேர்ந்த நெல்சன் அடைக்கலமாதா கோவில் தெருவை சேர்ந்த டேனியல்சாமி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி