திருச்சியில் வழிப்பறி செய்த ரவுடி கைது

83பார்த்தது
திருச்சியில் வழிப்பறி செய்த ரவுடி கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெர்னாடுசார்ஜ் நேற்று முன்தினம் மதியம் இவர் கிராப்பட்டி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த ரவுடி சங்கர் கத்தியை காட்டி மிரட்டி பெர்னாடு சார்ஜிடம் ரூபாய் ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றார். இதுகுறித்து புகாரின் பேரில் எடமலைப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கத்தி மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி