திருவரம்பூர் அருகே ஆலத்தூர் ஆனந்தம நகரை சேர்ந்தவர் வீரப்பன் இவர் திருச்சி ரயில்வே ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார் இவருக்கு கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி குடல் இறக்கத்திற்கான அறுவை சிகிச்சை நடந்தது அதிலிருந்து வீட்டில் இருந்து வந்த வீரப்பன் நேற்று மாலை வீட்டில் அருகில் மயங்கி கிடந்தார். அதை கண்டவர்கள் அவரை மீட்டு பொன்மலை ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு வீரப்பனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து திருவரம்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.