திருச்சி வீட்டின் பூட்டை உடைத்து திருடியவன் கைது

78பார்த்தது
திருச்சி வீட்டின் பூட்டை உடைத்து திருடியவன் கைது
திருச்சி உறையூர் புதுவெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மனைவி நிர்மலா இவர் கடந்த 20ஆம் தேதி காலை வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றார். 

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பெட்டியில் வைத்திருந்த 2.5 கிராம் தங்க மோதிரம் மற்றும் 10,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உறையூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து உறையூர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த மன்சூர் அலிகான் என்பவரைக் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து இரண்டு கிராம் தங்கம் மற்றும் 4,000 ரூபாய் ரொக்கத்தை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி