லால்குடி அருகே அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்

81பார்த்தது
லால்குடி அருகே அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் இலால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புள்ளம்பாடி வடக்கு ஒன்றியத்தில் பூத் (கிளை) கமிட்டி அமைக்கும் பணிகளை நேற்று முதல் கட்டமாக ஊட்டத்தூர் பாகம் (3, 4, 5, 6), தெரணிபாளையம் பாகம்(8, 9) ஊட்டத்தூர், செங்குந்தர், 

முதலியார் திருமண மண்டபத்திலும் காலை 10.30 மணியளவில் சிறுகளப்பூர் பாகம் (30, 31), வரக்குப்பை பாகம் (29), காணக்கிளியநல்லூர் பாகம் (46, 47, 48) சிறுகளப்பூர் MGR மன்றத்திலும் காலை 11.00 மணியளவில் நம்புக்குறிச்சி பாகம் (7) பெருவளப்பூர் பாகம் (32, 33, 34, 35) பெருவளப்பூர் ஊராளி கவுன்டர் திருமண மண்டபத்திலும் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும் மாவட்ட பொறுப்பாளருமான செ. செம்மலை மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் ஆகியோர் பூத் கமிட்டிகளை ஆய்வு செய்து பொறுப்பாளர்களை நியமனம் செய்தார்கள். 

அது சமயம் இந்த நிகழ்வுகளில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி