துறையூர் விவசாயிகளுக்கான அக்ரி ஸ்டாக் திட்டம் தொடக்கம்

84பார்த்தது
துறையூர் விவசாயிகளுக்கான அக்ரி ஸ்டாக் திட்டம் தொடக்கம்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் விவசாயிகளுக்கான அக்ரி ஸ்டாக் திட்டத்தின் மூலம் அரசின் மானியத் திட்டங்கள் மற்றும் பலன்கள் விவசாயிகள் நேரடியாக பெற ஒரு தனிப்பட்ட அடையாள எண் விவசாயிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. 

இத்திட்டமானது உற்பத்தி முதல் சந்தைப்படுத்துதல் வரையுள்ள அனைத்து தரவுகளையும் சேமிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக திருச்சி மாவட்டம் துறையூர் வட்ட விவசாயிகளுக்கு இத்திட்டமானது திறம்பட செயல்பட வேளாண்மை உதவி இயக்குனர் வீரமணி தலைமையில் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் வட்டார உதவி வேளாண் உதவி அலுவலர்கள் வெற்றிகரமாக பணியாற்றி வருகின்றனர்.

அவர்களிடமிருந்து கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் வேளாண்மை கல்லூரி மாணவிகள் அபிநயா, அபிராமி, அனாமிகா, சி. அருள்மொழி, பவித்ரா, புவனா, தீபா, திபிகா, தனம், தர்ஷினி, திவேனா, சஞ்சனா மற்றும் திரிஷா அக்ரி ஸ்டாக் திட்டத்தின் கீழ் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை பற்றி அறிந்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு அடையாளம் பெற்று விவசாய சார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகளைத் தடை இன்றி பெற இப்போது பதிவு செய்ய கேட்டுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி