திருவரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் திலீபன் வயது 40 இவருடைய மனைவி கணிதா வயது 39 திலீபன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த ஓராண்டாக வேலைக்குச் செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த திலீபன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது இது குறித்து உயிரிழந்த திலீபனின் மனைவி கணிதா அளித்த புகாரின் பேரில் திருவரம்பூர் காவல் நிலைய போலீசார் திலீபனின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்து வழக்கு பதிந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.