திருச்சி பெரியகடை வீதி சௌந்தரபாண்டியன் பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் இவர் அப்பகுதியில் நகை செய்யும் தொழில் செய்து வருகிறார் இந்நிலையில் தொழில் மார்க்கமாக கணேஷ் அதிகமாக கடன் பெற்றுள்ளார் அந்த கடன்களை அவரால் திரும்பித் தர முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த கணேஷ் நேற்று வீட்டில் சீலிங் ஃபேனில் போர்வைத் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து உயிரிழந்த கணேஷின் மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.