கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பாக, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட, புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ் ஏற்பாட்டில், முசிறி சட்டமன்றத் தொகுதி, தொட்டியம் கடைவீதியில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு. பரஞ்சோதி தலைமையில், கழக நிர்வாகிகள் கழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ், அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் தாடி மா. ராசு, சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். புல்லட் ஜான், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் மில்க் சரவணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.