திருவெறும்பூர்: கஞ்சா கடத்தல்; தந்தை மகன் உட்பட 3 பேர் கைது

64பார்த்தது
திருவெறும்பூர்: கஞ்சா கடத்தல்; தந்தை மகன் உட்பட 3 பேர் கைது
திருச்சி திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசருக்கு ஒரிசாவில் இருந்து திருச்சிக்கு பஸ்ஸில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருவரம்பூர் மதுவிலக்கு போலீசார் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் சம்பந்தப்பட்ட பஸ்ஸை நிறுத்தி சோதனை செய்தபோது பஸ்ஸில் இரண்டு பேக்கில் ஒரு சூட்கேசில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் பிரபல கஞ்சா வியாபாரியான திருச்சி ராம்ஜி நகர் மலைப்பட்டி முருகன் என்கிற பார்க்கிலி முருகன், அவரது மகன் சக்திவேல், பட்டுக்கோட்டை சேர்ந்த சுலைமான் மகன் அப்துல் பாசித் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

 பின்னர் அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு அவர்களை திருவரம்பூர் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி