திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளர் துரை வைகோ வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமாரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.