திருச்சி ராம்ஜி நகர் மில் காலனியை சேர்ந்தவர் திலக் இவர் ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் டூவீலரில் நேற்று சென்று கொண்டிருந்தார் அப்போது அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது அவரிடம் இருந்து 1. 400 கிலோ கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் மேலும் திலக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.