லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருவளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி சம்பவம் நடந்த மே 26 ஆம் தேதி அன்று பெருவளநல்லூர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் வந்த குமுளூரைச் சேர்ந்த பிரிட்டோ என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருமூர்த்தி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஜூன் 5) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விபத்தை ஏற்படுத்திய பிரிட்டோ என்பவர் மீது வழக்கு பதிந்து லால்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.