தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சுவீடன் நாட்டு அரசுப் பள்ளிகளில் உள்ள கட்டுமானங்களையும், அடிப்படை வசதிகளையும் பற்றி தெரிந்துகொள்ளும் விதமாக அப்பள்ளியைப் பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திராவிட மாடல் அரசு இந்தியாவிலேயே முதன்முறையாக Microsoft நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள முன்னெடுப்பு மற்றும் மணற்கேணி செயலி குறித்தும், தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் திறன்மிகுவகுப்பறைகளை
(Smart Class) உருவாக்கும் திட்டம் குறித்தும் அவர்களிடம் பெருமையோடு எடுத்துரைத்து, அறிவுப் பரிமாற்றத்திற்கான திட்டங்களைத் தங்களுடன் இணைந்து செயல்படுத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.