திருச்சி கொட்டப்பட்டு ஆவின் பால் பண்ணை வளாகத்தில் நடைபெறும் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா், பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களிலிருந்து வந்த பால் கேன்களில் உள்ள பால், ஆய்வகம், பாலைப் பதப்படுத்துதல், பதப்படுத்தப்பட்ட பாலை பாக்கெட்டுகள் தயாரிக்க அனுப்புதல், பாக்கெட்டுகள் தயாரிக்கும் விதம், குளிா்விப்பு அறையின் குளிா்விப்புத் தன்மை, பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அனுப்பப்படும் வாகனத்தில் குளிா்விப்புத் தன்மை, பால் பாக்கெட்டுகள் பால் விநியோக வாகனத்தில் ஏற்றுதல், நெய் தயாரிக்கும் இடம் மற்றும் ஊழியா்கள் பணி செய்வதையும் ஆய்வு செய்தாா். ஆவின் அலுவலா்கள் திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களின் துணைப் பதிவாளா் (பால்வளம்), விவசாய சங்கத் தலைவா், பால் விற்பனை முகவா்கள் சங்க உறுப்பினா்கள், பால் கொள்முதல் மற்றும் விநியோக வழித்தட வாகன உரிமையாளா்களிடம் கலந்தாய்வு நடத்தினாா்.
அப்போது விவசாய சங்கத் தலைவா் மூலம் பால் உற்பத்தியாளா்களின் குறைகள், விற்பனை முகவா்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை களைந்திட கருத்துரை வழங்கினாா்.
தொடா்ந்து, பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் மூலம் தினசரி பால் கொள்முதலை, பால் விற்பனையை, பால் காா்டு விற்பனையை அதிகரிக்க ஆட்சியா் அறிவுறுத்தினாா்.