திருச்சி ஸ்ரீரங்கம் வஉசி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மகன் கௌதம் (வயது 22) இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் மின்விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது தாய் மகேஸ்வரி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கௌதம் இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.