இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய குழு மற்றும் அனைத்து கிளை செயலாளர்கள் கூட்டம் 16.3.2025 மாலை 6 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள நமது தலைமை அலுவலகத்தில் இளைஞர் மன்றம் ஒன்றிய செயலாளர் தோழியர் A. இன்னசென்ட் விமலா மேரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடந்து முடிந்த வேலைகளை முன்வைத்து ஒன்றிய செயலாளர் தோழர் M.R. முருகன் அவர்கள் உரையாற்றினார்.
மாவட்ட குழு முடிவுகளை விளக்கி இளைஞர் மன்றம் சார்பில் நடைபெறும் இரத்ததான முகாம், நாளை நடைபெறும் மாதர் சங்க ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட விபரங்களை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் S. சிவா அவர்கள் உரையாற்றினார். ஒன்றிய மாநாடு சிறப்பாக நடத்துவது சம்பந்தமாகவும் பகுதி மக்கள் பிரச்சனைகள், இலவச வீட்டுமனை உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்துவது சம்பந்தமாக மாநகர் மாவட்ட துணை செயலாளர் தோழர் C. செல்வகுமார் அவர்கள் உரையாற்றினார்கள்.
கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் KN. ஜெகநாதன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் M. மருதாம்பாள், M. ரஜியாபேகம், S. முத்துலெட்சுமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் M. சகுந்தலா, S. லெட்சுமிபிரபா, M. பழனியம்மாள், கிளை செயலாளர்கள் S. சித்ரா, KS. சங்கரதாஸ், B. பல்கிஸ்பானு, மீனாட்சி, P. விஜயலெட்சுமி, மற்றும் K. தனலெட்சுமி, S. பாலாஜி, K. பாப்பாத்தி, T. லெட்சுமி உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.