திருச்சி மாநகரம் செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி நீதிமன்ற வளாகத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன வழக்கறிஞர் சந்தோஷ் குமார் என்பவரின் .TN.48.AB.8062Hero Honda Splendor Plus என்ற இருசக்கர வாகனத்தை ஆறு வருடங்கள் கழித்து கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெண்ணாடம் காவல் நிலையத்திற்குட்பட்ட பெரியகொசபள்ளம் பஸ் ஸ்டாப் அருகே வாகனத் தணிக்கையின் போது பெண்ணாடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் மற்றும் முதல் நிலைக் காவலர் தெய்வசிகாமணி, செல்வம் ஆகியோர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பின்பு E.Beat app மூலம் அந்த வாகனத்தின் மீது திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதை தெரிந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்பு அந்த வாகனத்தின் உரிமையாளர் மற்றும் திருச்சி மாநகர செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அந்த காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் வாகன உரிமையாளர் வழக்கறிஞர் சந்தோஷ் குமார் ஆகியோரிடம் வாகனத்தை ஒப்படைக்கப்பட்டது