ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பகல் பத்து மூன்றாம் திருநாள்

66பார்த்தது
அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து மூன்றாம் திருநாளான இன்று நாச்சியார் திருமொழிக்காக நம்பெருமாள் - மாம்பழ நிற பட்டு அணிந்து அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து: கலிங்கத்துராய்; கல் இழைத்த ஒட்டியாணம் கீரடத்தில் நெற்றி கட்டாக அணிந்து, வைர அபய ஹஸ்தம், கல் இழைத்த கோலக் கிளி; மார்பில் பங்குனி உத்திர பதக்கம், அடுக்கு பதக்கங்கள், நெல்லிக்காய் மாலை, 6 வட முத்து சரம் பின்புறம் அண்ட பேரண்ட பக்ஷி பதக்கம், புஜ கீர்த்தி, திருக் கைகளில் தாயத்து சரம் , ரத்தின திருவடி அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தொடர்புடைய செய்தி