ஸ்ரீரங்கம்: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

65பார்த்தது
ஸ்ரீரங்கம்: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு
கொள்ளிடம் ஆற்றில் வியாழக்கிழமை மாலை முதியவர் சடலம் மிதப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் அங்கு சென்று முதியவர் சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தார். 

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், இறந்தவர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (60) என்பதும், கொள்ளிடம் கரையோரம் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் மதுபோதையில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி