திருச்சி மத்திய மாவட்ட தி. மு. க. மகளிர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. அதில், பங்கேற்ற எம். பி. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தொகுதிவாரியக மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
அதன் பிறகு தான் தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று இட ஒதுக்கீடு மசோதாவில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. எப்போது கணக்கெடுப்பு துவங்கும் என்பதில் தெளிவில்லை. கணக்கெடுப்பு எப்போது துவங்கி, எப்போது முடியும் என்பது போன்ற பல சர்ச்சைகள் இருக்கும் நிலையில், மறுசீரமைப்பும் செய்து மசோதாவை நடைமுறைப்படுத்த 10 ஆண்டுகளாகலாம், 30 ஆண்டுகளாகலாம். நேர வரையறை யாருக்கும் தெரியாது. அதனால், அந்த இட ஒதுக்கீடு இந்த தேர்தலில் வருவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை. எந்த தேர்தலில் வரும் என்றும் தெரியவில்லை. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தாலும், எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது என்பதால், வெறும் கண்துடைப்பு தான்.
தி. மு. க. , தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும், பார்லிமெண்ட் வளாகத்திலேயே பெண் எம். பி. , யை கொச்சையாக பேசி அச்சுறுத்துவது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.