இலங்கைக்கு தரை மார்க்கமாக பாதை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனுஷ்கோடிக்கு இடையே உள்ள ராமர் பாலம் பாதிப்பு ஏற்படாத வகையில் அதற்கான விஷயங்கள் பரிசலீக்கப்பட்டு வருகிறது.
இந்தியா இலங்கை உடன்படிக்கை ஏற்பட்டாலும் இலங்கை அரசின் பொருளாதார நெருக்கடியால் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இலங்கையில் காற்றாலை மூலம் 500 மெகாவாட் அளவிலான பெரிய காற்றாலை மின் உற்பத்திக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் திருகோணமலை கிழக்கு துறைமுகம் அதற்கான கப்பல் போக்குவரத்திற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடல் அடியிலான குழாய் மூலமாக என்ணை மற்றும் கேஸ் பரிமாற்றம் தொடர்பான சேவைகளுக்கும் இந்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
எங்களுடைய கட்சியைப் பொறுத்தமட்டில் எதிர்க்கட்சி கூட்டணியாக இருக்கிறோம். ரனில் விக்கிரமசிங் தலைமையிலான கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டியிருக்கிறோம். எங்களுக்கும் அவர்களுக்கும் கொள்கையில் உடன்பாடு குறைவு தான் எங்களை பொறுத்தமட்டில் தமிழக மீனவர்கள் இடையேயான முரண்பாடுகளை கையாள்வதில் கருத்து வேறுபாடு இருக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வரும்போது தமிழர்கள் மீள் குடியேற்றம் வாழ்வதற்கு தொடர்பான திட்டங்களை மேற்கொள்ளுவோம்.
இந்திய அரசு எங்களுக்கு நாலாயிரம் மில்லியன் உதவிகளை செய்து, பெட்ரோல், கேஸ் தட்டுப்பாடு உள்ளபோது இந்திய அரசு முன் வந்து உதவி செய்திருக்கிறது.