திருச்சி எடமலைப்பட்டி புதூர் கல்லுப்பட்டறை பகுதியைச் சேர்ந்த சிவமுருகன் மகன் தினேஷ்குமார் பிளஸ் டூ படித்துள்ளார். இவர் நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் சந்தோஷ் உடன் முக்கொம்பு சுற்றுலா மையத்துக்கு வந்துள்ளார்.
பின்னர் இருவரும் காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது ஆழமான பகுதியில் சிக்கிய தினேஷ்குமார் தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற திருச்சி தீயணைப்பு துறையினர் தினேஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் தேடிய நிலையில் இரவு நேரமானதால் தேடும் பணியை கைவிட்டு சென்றனர். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.