திருச்சி பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

51பார்த்தது
திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அரசு மாதிரி பள்ளி ரூ69 கோடி மதிப்பீட்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயில்வதற்காக தரைதளம் முதல் தளம் என வகுப்பறைகள் ஆய்வுக்கூடங்கள் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டது.
இந்த அரசு மாதிரி பள்ளியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த தனபாலின் மகள் பிரித்திகா என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு பயாலஜி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்த அவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அரசு மாதிரி பள்ளி வளாக முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் அறிந்த துவாக்குடி போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து சக மாணவியரிடமும் ஆசிரியர்களிடமும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாணவி இறந்தது குறித்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மாதிரி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி இறந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி