இன்ஸ்பெக்டரின் பேச்சுவார்த்தையால் சாலை மறியல் ரத்து

54பார்த்தது
இன்ஸ்பெக்டரின் பேச்சுவார்த்தையால் சாலை மறியல் ரத்து
முசிறி காவல் ஆய்வாளரின் பேச்சுவார்த்தையை அடுத்து உமையாள்புரம் பொதுமக்கள் சாலை மறியல் திட்டத்தை கைவிட்டனர்

திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் செவுந்தலிங்கபுரம் ஊராட்சியைச் சேர்ந்த உமையாள்புரம் பொதுமக்கள் தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர் இதை அறிந்த முசிறி காவல் ஆய்வாளர் கதிரேசன் செவந்த லிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி ஆகியோரை அழைத்து காவல் நிலையத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என கூறியதையடுத்து சாலை மறியல் திட்டம் கைவிடப்பட்டது. மேலும் ஊராட்சி நிர்வாகத்தில் செலவு செய்யப்பட்ட நிதிகள் குறித்த பேச்சுவார்த்தை ஒரு வாரத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இதை அடுத்து செவந்தலிங்கபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் அமைதியுடன் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி