முசிறி அருகே உள்ள தா. பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் போலீசார் மேட்டுப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மேட்டுப்பாளையம் கருப்பு கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக தனது மொபைல் போனை பயன்படுத்தி விற்பனை செய்து கொண்டிருந்த சதீஷ்குமார் என்பவரை பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதும் பேப்பர்கள், ரூபாய் 310 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.