கணவர் மாயம், மனைவி காவல் நிலையத்தில் புகார்.

1724பார்த்தது
தேவானூர் புதூர் கிராமத்தில் கணவனின் கள்ளத்தொடர்பை மனைவி கண்டித்ததால் கணவன் மாயம்.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தேவனூர் புதூரைச் சேர்ந்தவர் காயத்ரி வயது 21. இவரது கணவர் சிவக்குமார் வயது 22. இவர்கள் இருவரும் கணவன் மனைவி ஆவார்கள். சிவக்குமார் மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதை மனைவி காயத்ரி கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் கணவர் சிவக்குமார் வீட்டிலிருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கணவர் கிடைக்கவில்லை. இதை அடுத்து மனைவி காயத்ரி தா. பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், தா. பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, காணாமல் போன சிவக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி