துறையூர் அருகே பைக் விபத்து கல்லூரி மாணவர் பலி

63பார்த்தது
துறையூர் அருகே உள்ள தா. பேட்டையைச் சேர்ந்தவர் தனபால் மகன் தரண் வயது 19 பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஇ படித்து வருகிறார் சம்பவம் நடந்த நேற்று கல்லூரி முடிந்து தனது யமஹா ஆர்15 இருசக்கர வாகனத்தில் தா. பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார் பைக் நாகலாபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்த விபத்துக்கு உள்ளானது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தரனின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி