திருச்சி அரியமங்கலத்தில் செல்போன் டவர் மாயம்

58பார்த்தது
திருச்சி அரியமங்கலத்தில் செல்போன் டவர் மாயம்
திருச்சியில் செல்போன் டவர் மாயமானது குறித்து புகாரின் பெரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் மணிகாந்த் இவருக்கு சொந்தமான வீடு திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவில் உள்ளது இந்த வீட்டில் சென்னை புரசைவாக்கம் சிட்டி சென்டர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் கடந்த 2022 டிசம்பர் மாதம் செல்போன் டவர் அமைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் நிலம் கையாகப்படுத்தும் அதிகாரி தாஜ்மல்கான் செல்போன் டவர் அமைந்துள்ள பகுதியில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அரியமங்கலம் போலீஸ்சார் நேற்று வழக்கு பதிந்த விசாரிக்கின்றனர். மாயாமானா செல்போன் டவரின் மதிப்பு 16 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி