தந்தை தாயை தாக்கிய மகன் மீது வழக்குப்பதிவு

1484பார்த்தது
கண்ணனூர் பாளையம் வடக்கு கொட்டத்தில் சொத்து பிரச்சனையில் தந்தை தாயை தாக்கிய மகன் மீது வழக்குப்பதிவு

துறையூர் வட்டம் கண்ணனூர் பாளையம் வடக்கு காட்டு கோட்டத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் வயது 60. இவரது மனைவி தனம் வயது 55. இவர்களுக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. கடன் சுமை காரணமாக ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை பாண்டியன் விற்று விட்டார். இந்த சூழ்நிலையில் அவரது மகன் விமல் வயது 39 குடிபோதையில் வீட்டுக்குள் வந்து மீதி நிலத்தை தனது பெயருக்கு எழுதி தரக்கோரி தகராறு செய்து தந்தையையும் தாயையும் இரும்பு கம்பியால் அடித்தள்ளார். தந்தையின் கையில் விரல்களை பற்களால் கடித்துள்ளார். காயமடைந்த தந்தையும் தாயும் துறையூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து தந்தை பாண்டியன் அளித்த புகாரின் பெயரில் மகன் விமல் மீது ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி