திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் அகிலா தம்பதியினர். இந்நிலையில் இவர்கள் இருவரும் டூவிலரில் மரவனூர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது டூவிலர் கட்டுப்பாட்டை இழந்த போது இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அகிலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து மணப்பாறை போலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.