திருச்சி: குளிா்கால ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

80பார்த்தது
திருச்சி: குளிா்கால ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
திருச்சியில் இருந்து காலை 4. 45 மணிக்கு புறப்படும் திருச்சி - ஸ்ரீ கங்கா நகா் ஹம்சபா் அதிவிரைவு ( 22498) ரயிலில் ஜன. 10 முதல் 31- ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு குளிா்ச்சாதன (ஏ. சி) பெட்டி இணைக்கப்படுகிறது.

மறுமாா்க்கத்தில் ஸ்ரீ கங்கா நகரிலிருந்து பகல் 1. 55 மணிக்குப் புறப்படும் ஸ்ரீ கங்காநகா் - திருச்சி ஹம்சபா் அதிவிரைவு ரயில் ( 22497) ஜன 6-முதல் 27- ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு குளிா்ச் சாதன (ஏ. சி) பெட்டியுடன் இயங்கும்.

இதேபோல் திருச்சியில் இருந்து காலை 8. 10 மணிக்கு புறப்படும் திருச்சி - ஜோத்பூா் ஹம்சபா் அதிவிரைவு ரயிலில் (20482) ஜன 4 முதல் பிப். 1-வரை கூடுதலாக ஒரு 2-ஆம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

மறுமாா்க்கத்தில் ஜோத்பூரிலிருந்து மாலை 4. 50 மணிக்கு புறப்படும் ஜோத்பூா் - திருச்சி ஹம்சபா் அதிவிரைவு ரயிலில் (20481) ஜன. 1 தொடங்கி 29- ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு 2- ஆம் வகுப்பு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியுடன் இணைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி