திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தரசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் ரவிச்சந்திரன் வயது எண்பது அப்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டில் அவர் சடலமாக கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்த அவருடைய பேரன் இதுகுறித்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் தெரிவித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.